TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
TN PWD துறையில் காலியாக இருக்கும் நகரம் மற்றும் நாடு உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வு சமீபத்தில் TNPSC ஆல் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு பொதுப்பணித் துறை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு முக்கியமான துறையாகும். இந்த பொதுப்பணித்துறை அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது. இப்போது, தமிழ்நாடு பொதுப் பணி திட்டமிடல் (TN PWD) துறையின் கீழ் நகரம் மற்றும் நாடு உதவி இயக்குனர் பதவியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் கடந்த 28.05.2022 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போது தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நகரம் மற்றும் நாடு உதவி இயக்குனர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களில் இடம்பெற்றிருந்த ஆவணங்களுடன் 22.07.2022 முதல் 01.08.2022 வரை இ-சேவா மையங்களில் TACTV மூலம் நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.
NTPC நிறுவன Executive வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.90,000/-
இதற்காக நியமிக்கப்பட்ட இ-சேவை மையங்களின் பட்டியல் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் எண்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_04_AD_TCP_CV_I.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.