TN TET தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளோர் கவனத்திற்கு – தயாராவது எப்படி? சில டிப்ஸ்!
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணியிடத்திற்காக ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வில் எப்படி படித்தால் வெற்றி பெறலாம் என்று பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2019 ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. அதன்படி கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் அரசு ஆசிரியர் பணியிடத்திற்காக ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
இதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் தாள் எழுதுவதற்கு 12ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை பயின்றவராக இருக்க வேண்டும். இதன் 2 தாள் எழுத இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படுகிறது.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
- முதலில் தமிழில் செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படித்துக்கொள்ளுங்கள். இதற்கு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படிக்க வேண்டும். நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு புத்தகங்களை படித்து கொள்ள வேண்டும்.
- இதையடுத்து உளவியல் பாடங்களை படிக்கும் போது புரிந்து படித்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
- கணித பகுதிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்தால் போதும். தினமும் கணித பாடத்திட்டத்தில் தலைப்பின் கீழ் உள்ளவற்றை பயிற்சி செய்து உங்களை தயார்ப்படுத்த வேண்டும்.
- அறிவியல் பகுதிக்கும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் சுற்றுச்சூழல், உயிரினங்கள், குடும்பம், உணவு, ஆரோக்கியம், விவசாயம் மற்றும் மண், நீர், ஒலி, ஒளி, வெப்பம், அளவீடு, இயக்கம், ஆற்றல் மூலங்கள் உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து கொள்ள வேண்டும்.
- சமூக அறிவியல் பகுதிக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை படிக்க வேண்டும். அதன்பின்னர் நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் வரலாறு, இந்திய தேசிய இயக்கம், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் போதுமானது தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும்.