TN TET தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் TNTET தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த தேர்வர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால் அதனை நாளையுடன் முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TET தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக சென்ற ஆண்டு எந்த ஒரு தேர்வும் நடத்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்தஅறிவிப்பு மார்ச் 7ஆம் தேதி வெளியிட்டது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வரை என்று கூறப்பட்டு இருந்தது.
TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள் பற்றிய முக்கிய அலசல் – மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும், தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பு படித்தவர்கள் TET முதல் தாள் தேர்வுக்கு 230878 பெரும், TET இரண்டாம் தாள் தேர்வுக்கு 401886 பெரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் திருத்தும் செய்து கொள்ள கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினர். அந்த மனுவை ஏற்று TET முதல் தாள் மற்றும் TET இரண்டாம் தாள் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது
அதன்படி, ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை திருத்தம் செய்ய இணையத்தளம் மூலமாக வழிவகை செய்யப்பட்டது. எனவே கல்வித்தகுதி, விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் நாளை (ஜூலை 27) ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளும்மாறும், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்றும், இனி திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.