TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஜூலை 16 வரை கால அவகாசம்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் ஜூலை 11 முதல் 16 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப திருத்தம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா பேரலைத்தொற்று நிமித்தமாக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அடிக்கும் அரட்டை – வைரலாகும் வீடியோ!
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து TET தேர்வு இம்மாத இறுதியில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதத்துடன் முடிவடைந்த TET தேர்வுக்கான விண்ணப்பதிவு செயல்முறையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் ஜூலை 11 முதல் 16 வரை திருத்தங்களை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளபடி, விண்ணப்பதாரர்கள் ஜூலை 11 முதல் 16 வரை தாள் 1 மற்றும் 2ற்கான விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.