TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – கணினி வழியில் தேர்வு! முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இதனை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
டெட் தேர்வு
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்படுகிறது கடந்த 2 வருடங்களாக டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் டெட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து ஓரிரு மாதங்கள் ஆன நிலையில் தேர்வு எப்போது என்று விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசு துறையில் காலிப்பணியிடங்கள் – 2,05,700 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் தேர்வை கணினி வழியில் நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த கணினி வழித் தேர்விற்கு தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயிற்சித் தேர்வு நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் கணினியில் வழியில் தேர்வை எவ்வாறு எழுதலாம் என்று பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி குறித்த அறிவிப்புகள் மற்றும் தேர்வு அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ஆகிய விவரங்கள் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.