TMB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை! இதை மட்டும் செய்யாதீங்க!
இந்தியாவில் ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பண மோசடி:
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. அதிலும் பண பரிவர்த்தனை என்பது முழுவதுமாக ஆன்லைன் மையாகி விட்டது. நாம் தம் கைகளில் உள்ள ஸ்மார்ட் போன்கள் வாயிலாக மற்றவருக்கு எளிதாக பணத்தை அனுப்பலாம். மேலும் நமக்கு தேவைப்பட்டாலும் ஏடிஎம் வாயிலாக எடுத்து கொள்ளலாம். வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை மிக எளிதாக இருந்தாலும் இதில் சிக்கல் என்னவென்றால் மோசடி செய்யும் நபர்கள் உங்களது வங்கி சார்ந்த விவரங்களை உங்களுக்கே தெரியாமல் கையாடல் செய்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுகின்றனர். இது போன்ற பண மோசடி சம்பவங்கள் தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அதனால் மக்கள் பண பரிமாற்று விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்களும் அறிவுறுத்தி வருகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. பண்டிகை காலங்களில் 211 சிறப்பு ரயில்கள் – இந்திய ரயில்வே அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது உங்களுடைய டெபிட் கார்டு நம்பர், கிரெடிட் கார்டு நம்பர், CVV நம்பர், அதன் காலக்கெடு தேதி, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி போன்ற முக்கிய தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனை பகிர்வதன் மூலம் பணத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்