திருப்பதி கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் அங்கப்பிரதட்சிண டோக்கன் விநியோகம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அந்த வகையில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தரிசனம்:
ஆந்திராவில் உள்ள பிரசதிப்பெற்ற வழிபாட்டு தளமான திருமலை ஏழுமலையான் கோவில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்வர்கள். மேலும் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் சேவைகளுடன் கூடிய தரிசனம் என்று பல்வேறு முறைகளில் தரிசன டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் முன் பதிவு எல்லாம் முடிந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நாளை காலை (ஜூலை 24) முதல் இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையதளத்தில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பான வேண்டுதல்களில் ஒன்றாக இருக்கிறது. அதிகாலையில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணம் பெருமாளின் அருளை பெற்று தரும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அங்கப்பிரதட்சணம் முடிந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதன் மூலம் சிறப்பு தரிசனம் போல விரைவாக சுவாமி தரிசனம் செய்யப்படும். அதனால் பல பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து சென்ற மாதம் முதல் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த மாதம் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன் படி நாளை (ஜூலை 24) முதல் காலை 11 மணிக்கு இதற்கான ஆன்லைன் கவுன்ட்டர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்த அனைத்து தினங்களுக்கும் தலா 1,500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழுமலையானை தரிசனம் செய்து பயன்பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.