ATM ல் பணம் எடுக்க போறீங்களா?- அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்கள் நினைத்த நேரத்தில் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட ATM வசதியில் பணம் எடுக்கும் போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ATM சேவை கட்டணம்:
நாட்டின் அனைத்து வங்கிகளும் தற்போது பல அதிநவீன வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. முன்னதாக அனைத்து வித வங்கி தொடர்பான சேவைகளுக்கும் மக்கள் நேரடியாக வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பங்கள் அனைத்து சேவைகளையும் விரல் நுனிக்கு கொண்டு வந்துள்ளது. பணப்பரிமாற்றங்கள் ஆன்லைனில் செய்வது மிகவும் எளிமையாக உள்ள போதிலும், இன்னும் ATM மையங்களை நாடி செல்லும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில், ATM மூலம் பணம் எடுக்கும் போது சில குறிப்பிட்ட கட்டண வரைமுறைகளை வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாம் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியின் ATM மூலம் பணம் எடுக்கும் போது 5 முறை 1 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நமது கணக்கு இல்லாத வேறு வங்கியின் ATM மூலம் எடுக்கும் போது 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.
பொதுமக்களுக்கு அலர்ட்.. அக்.11 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
சமீபத்தில் பரவிய செய்தி ஒன்றில் ATM மூலம் பணம் எடுக்கும் போது 5 முறைக்கு மேல் ரூ.173 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ATM மூலம் பணம் எடுக்கும் போது 5 முறைகளுக்கு மேல் ஒவ்வொரு முறையும் ரூ.21 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுவது தான் உண்மை. சமூக வலைத்தளங்களில் போலியாக பரவும் இது போன்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்