Post Office இல் கணக்கு துவங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!
போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்களின் நலனுக்காகவே பல புதிய நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக என்னென்ன பலன்களை பெற முடியும் என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Office திட்டங்கள்
இந்திய போஸ்ட் ஆபிஸ் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, மூத்த குடிமக்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. மேலும், இந்த திட்டத்திற்கு வட்டியுடன் வரி சலுகையும் அதிகமாக கொடுக்கப்படுகிறது என்பதால் பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நடைமுறையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களை பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – காவல்துறை ஆணையர் உத்தரவு!
முதலில், 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. அதாவது, இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தி செய்த குடிமக்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தி இணைந்து கொள்ளலாம் மற்றும் அதிகபட்ச தொகையாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதனையடுத்து, வருமான முதலீட்டுத் திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சேர விரும்பினால் வங்கியின் மூலமாகவோ அல்லது தபால் நிலையங்களின் மூலமாகவோ இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, ஓய்வூதியத்திற்கான சேமிப்பு திட்டமாக விளங்கி வரும் அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) திட்டம் பலவகையான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்திற்கு வரி சலுகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதியத்திற்கான வட்டியும் அதிகரிக்கப்படுகிறது. அதாவது, பிரிவு 80 CCD (1) இன் கீழ் நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்தால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 வரைக்கும் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.