திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

0
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து புரட்டாசி மாதத்தில் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

திருப்பதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் இருக்கும் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவிலில் அங்கபிரதட்சணம், இலவச தரிசனம் உள்ளிட்டவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

அதன்படி தற்போது கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பிரம்மோற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பக்தர்கள் கலந்து கொள்வதுடன் பிரம்மோற்சவத்தை நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இதற்கான அட்டவணையையும் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் வருகிற 6 மற்றும் 21ம் தேதி அன்று சர்வ ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து 7ம் தேதி அன்று வாமன ஜெயந்தியும் 9ம் தேதி அன்று அனந்த பத்மநாப விரதமும், 11ம் தேதி மகாளய பக்‌ஷம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு 20ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கும். இந்த விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் திருவிழாவும் , 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி பிரம்மோற்சவ விழாவும், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 27ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!