திருப்பதி தரிசனம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில் இந்த மாதம் வரிசையாக விடுமுறை நாட்கள் இருப்பதால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கை குழந்தை வைத்திருப்பவர்கள் தரிசனம் செய்வது குறித்த முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்:
திருப்பதி கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் நாளை 11-ம் தேதி ஸ்ராவன பவுர்ணமி, 12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, 13, 14-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 15-ம் தேதி சுதந்திர தினம் என இந்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வர உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தை உடன் திருப்பதிக்கு வர திட்டமிடுபவர்கள் தங்களது பயணத்தை இந்த வாரம் இல்லாமல் மற்றொரு வாரம் தள்ளி போட வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மேலும், 19-ம் தேதி கோகுலாஷ்டமி, 20 மற்றும் 21-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த 3 நாட்களும் கூட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் புதிய உத்தரவு
அதனால் அந்த தினங்களும் திருமலை யாத்திரை குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும், முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே திருப்பதிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் தரிசனம் செய்வதை தள்ளி போட வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் திருமலையில் நடைபெறும் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று (ஆகஸ்ட் 10) துணை சன்னதிகள், உற்சவமூர்த்திகளுக்கு பவித்ர பட்டு நூற்மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.