கோவில்களில் திருமணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்!
கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத்துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்க கூடாது என அண்மையில் வருவாய்த் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு இது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
முக்கிய தகவல்:
திருமணம் செய்பவர்கள், சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறவும் அரசு வழங்கும் பல்வேறு வகையான உதவிகளைப் பெறவும் தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது தற்போது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதேபோல் அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் திருமணம் செய்யும் மணமக்கள், தங்களுக்கு இதுதான் முதல் திருமணம் என உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய சான்று பெற்றுச் சமர்ப்பித்துவருகின்றனர். மேலும் சமூக நலத் துறையின் திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கும், கிராம நிர்வாக அலுவலகர்களிடம் சான்றுக்காக அணுகுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதுபோன்ற சான்றிதழ் வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், கிராம நிர்வாக அலுவலகர்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் வருவாய் நிர்வாக துறை, பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், திருமண சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள், இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்கள், திருமண பதிவின் போது கிராம நிர்வாக அலுவலகர்களிடம் இருந்து, முதல் திருமண சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை – அரசாணை வெளியீடு!
இதற்குப் பதிலாக பொதுமக்கள் வருவாய்த்துறை சார்பில் இ – சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ- சேவை மையங்கள் மூலம் திருமணமாகாதவர் என்ற சான்றினை பெற்றுக் கொள்ளலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருமணத்தை நடத்த விரும்புவோர் இச்சான்றினை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.