ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி அமைச்சகம் முக்கிய நடவடிக்கை!
கொரோனா காலகட்டத்தில் இந்திய அளவில் கல்வி நிலையங்கள் செயல்படாத காரணத்தால் சுமார் 32 கோடி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி அமைச்சகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய பஸ் சேவை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு கற்பித்தல் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து வைரஸ் பாதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-2022 ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 2022-2023 ம் கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகளும் தொடங்கி உள்ளது.
இருபாலர் பயிலும் பள்ளிகளாக மாறும் அரசு பெண்கள் பள்ளிகள் – அரசு அதிரடி முடிவு!
கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை ஈடுசெய்யும் பொருட்டு மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையில் ஆசிரியர் மாணவர் நலன் கருதி புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வர உள்ளது. அதாவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக “பாடசாலை சேவை” என்ற பெயரில் புதிய தனியார் பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆம் தேதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி முதல் “பாடசாலை சேவை” பஸ்களின் பெயர்ப் பலகையில் குறித்த பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினமும் இரண்டு முறை இந்த புதிய பஸ் சேவை இடம் பெற உள்ளது. எனவே, ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த பஸ் சேவைக்கு கட்டணம் செலுத்தி எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மாணவர்கள் எவ்வித அசோகரியமும் இன்றி பாடசாலைக்கு செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலை மாலை பாடசாலை நேரம் மட்டும்
8.30 AM – 4.30PM