TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Hybrid Model எப்படி செயல்படுத்தப்படும்? முழு விவரம்!
TCS, Infosys மற்றும் HCL Tech உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வேலை செய்ய வைப்பதற்கு ஹைப்ரிட் மாடல் முறையை தேர்வு செய்துள்ளதாக கூறி இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
ஹைபிரிட் மாடல் பணி:
இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால், ஊழியர்கள், தங்கள் நிறுவனங்களில் என்ன பணி மாடல் கடைப்பிடிக்கப்பட போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் TCS, Infosys, HCL போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடல் பணி நடைபெறும் என்று முன்னதாகவே அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்களை நேரடியாக அலுவலகம் வர வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இன்னும் ஒரு சில நிறுவன ஊழியர்கள் ” WORK FROM HOME”ல் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
TCS மாடல்
வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்தும், சில நாட்கள் அலுவலகத்திற்கு வந்தும் வேலை செய்யும் ஹைப்ரிட் வொர்க் மாடல் அமலுக்கு வர இருப்பதாக டாடா கன்சல்டென்ஸி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது குழந்தை பராமரிப்பு, விலங்கு பராமரிப்பு, வீட்டு வேலை என பல வகைகளில் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளின் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Infosys மாடல்:
இன்ஃபோசிஸ் நிறுவனம், 3 விதமான வொர்க் மாடல்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அலுவலகம் அமைந்திருக்கும் அதே ஊர்களில் வீடு இருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக வெளியூர்களில் உள்ள ஊழியர்கள் அடுத்த சில மாதங்களில் அலுவலகம் வரவும், மூன்றாவதாக நீண்ட கால அடிப்படையில் ஹைப்ரிட் வேலை திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
HCL மாடல்
ஹெச்சிஎல் நிறுவனம் , தங்களது நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தது. மேலும் இயல்பு நிலை திரும்பும் வரையில் ஹைப்ரிட் மாடல் பணி தொடரும் என்று HCL அறிவித்துள்ளது.