TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work From Home!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் மீண்டும் பழையபடி ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்யத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் HCL போன்ற உயரிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அலுவலங்களுக்கு அழைத்து வருகிறார்கள்.
Work From Home:
2 ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்த எந்த ஊழியர்களும் நேரடியாக பணிக்கு செல்லவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ள காரணத்தினால் அனைத்து நிறுவனங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வேலையாட்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் இன்போசிஸ் போன்ற முக்கியமான பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வேலை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்வதில் இந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்று கட்ட திட்டங்களை பின்பற்றி வருகிறது. தற்போது 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் வேலை செய்து வருகின்றனர். மீதி 95 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டன்று கமகமக்கும் பால் பாயசம் செய்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா – வைரலாகும் வீடியோ!
தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் 40 முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளது எதிர்காலம் மற்றும் பாதையை உடைக்கும் 25/ 25 மாடல் ஏற்றுக்கொள்வதற்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் உறுதியாக இருக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் கூட்டாளிகளில் 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகங்களிலிருந்து வேலை செய்ய வேண்டியதில்லை. 25 சதவீதத்திற்கு மேல் தங்களது நேரத்தை அலுவலகத்திலும் செலவிட வேண்டியதில்லை என அறிவித்துள்ளது.