TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH முறை?
இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் ஆகியவை கலப்பின வேலை மாடலுக்கு தயாராகி வருவதாகவும், இப்போது அலுவலகத்தில் 20 முதல் 50% பணியாளர்களை மட்டும் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
WFH முறை
உலகம் முழுவதும் கொரோனா தொற்று சூழல் ஓய்ந்து வந்ததற்கு பிறகு தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தனது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு திரும்புமாறு வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிறுவனம் மே 23 முதல், வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு தனது ஊழியர்களை அழைத்ததன் கீழ் ஒரு கலப்பின வேலை முறையை திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால், சீனாவின் ஷாங்காயில் உள்ள அதிகாரிகள், கொரோனா வழக்குகளின் திடீர் எழுச்சி காரணமாக ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு (WFH) மாறுமாறு மக்களை வற்புறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை விரைவில் அலுவலகங்களுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டது. அதற்காக ஊழியர்கள் அனைவருக்கும் மின்சார ஸ்கூட்டர்களுக்கான மாதாந்திர சந்தா திட்டத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவர்க்கான – முக்கியத் தகவல்கள் இதோ…!
மறுபக்கத்தில், இந்தியாவில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையை பின்பற்றி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. சில நிறுவனங்கள் WFH குறித்த தங்கள் ஊழியர்களுக்கான இறுதி முடிவை எடுக்க, அரசாங்க உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள். இப்போது, தினசரி அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஒரு கலவையுடன் வேலை செய்வார்கள் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் கருத்து தெரிவித்தாலும், டிசிஎஸ் அதன் 25-25 மாடலில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில், TCS தனது 25-25 மாதிரி மூலம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக கலப்பின வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாதிரியின்படி, 2025ம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோல், ஹெச்சிஎல் நிறுவனமும் ஹைப்ரிட் மாடலை நோக்கிச் செல்கிறது. ஏனெனில் இந்த ஐடி நிறுவனமானது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி இருக்கிறது.