TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Work From Home முடிவுக்கு வருமா?
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் உள்ளிட்டவை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த உள்ள இந்த நிலையிலும் ஹைப்ரிட் மாடல் வேலைகளைத் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைப்ரிட் மாடல் திட்டம்:
கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. மேலும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK FROM HOME’ முறையை தொடர்ந்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும்படி அழைத்து வருகின்றன.
இந்நிலையில் TCS, HCL, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போது, ஹைப்ரிட் மாடல் வேலைகளைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளன. TCS இன் 25-25 மாடல், மக்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் பொருள் 2025 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் ஊழியர்களில் 25% மட்டுமே அலுவலக வளாகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். மேலும் அந்த 25% ஊழியர்களும் தங்கள் வேலையில் 25% நேரத்தை மட்டுமே செலவிட வேண்டும்.
மத்திய அரசின் ‘அடல் பென்சன் யோஜனா’ திட்டம் – மாதம் 5,000 வரை ஓய்வூதியம்!
இதை தொடர்ந்து ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்பதால், ஹைப்ரிட் முறையில் தொடர்ந்து செயல்படும் என்றும், “எங்கள் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று, பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகும். நாங்கள் எங்கள் வணிக இயல்பு நிலையை பராமரிப்பதில் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கிறோம், அதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை உறுதி செய்கிறோம்” என HCL தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஊழியர்களை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு நிறுவனம் ஊக்குவித்துள்ளது. அதில் 40-50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பிய பிறகு, அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது.