தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – அக். 12ம் தேதி மின்தடை! எச்சரிக்கை மக்களே!
திண்டுக்கல் மாவட்ட துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதற்கு மத்தியிலும் கடந்த மாதம் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றபடுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 12ம் தேதி திண்டுக்கல் மாவட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஐடி பணியாளர்களே உஷார்! குறையும் வேலைவாய்ப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அதனால் வாழைக்காய் பட்டி, பென்னகரம், நல்லாம்பட்டி, தோமையார்புரம் ரெட்டியபட்டி, உத்தனம்பட்டி, சிறுமலை அடிவாரம், என்.ஜி.ஓ.காலனி, நரசிங்கபுரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியபட்டி, பாரதிபுரம், ரயில் நிலையம்,நாகல்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்