தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷின் பேட்டி!
மாணவ, மாணவிகள் இந்த வயதில் படிப்பில் கவனம் செலுத்தாமல் விட்டால் அவர்கள் எதிர்காலம் மோசமடைந்து விடும் என்றும், படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் வரும் காலம் சிறப்பாக அமையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ்:
கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் கல்வியில் ஆர்வம் குறைந்துள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும், மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நடைபெறும் என்றும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி வட்டார, மாநில, மாவட்ட போட்டிகள் நடைபெறும் எனவும் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனைத்தொடர்ந்து, மலை சுற்றுலா பகுதிகளில் கோடை விடுமுறையின் போது மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் மாணவர்களுக்கு எவ்வளவு நற்செய்திகளை செய்து கொண்டிருந்தாலும் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் உத்தரவின் பெயரில் முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.
ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு – 35 ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!
அதில் கூறியதாவது, பெரியவர்களிடம் நாம் எப்போதும் அன்போடு பழக வேண்டும் என்றும் , இன்முகத்துடன் அவர்களிடம் பேச வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். கண்ணுக்குத் தெரிந்த வயதானவர்களுக்கு எந்த உதவி கேட்டாலும், அதை மறுக்காமல் மகிழ்ச்சியோடு மாணவர்கள் செய்திட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவிகள் இந்த வயதில் படிப்பில் அதிகம் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும், ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருப்பது உங்க நலனுக்காக தான் எனக் கூறியுள்ளார்.