தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அவர்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அரசு தேர்வுத்துறையின் உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பேரலை காரணமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு அகமதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்கால கல்விக்கும், வாழ்விற்கும் பள்ளியின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தான் ஆதாரமாகவும், அடிப்படையாகவும் இருப்பதால் பலரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2021-2022ம் கல்வியாண்டில் கட்டாயம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

Exams Daily Mobile App Download

கல்வியாண்டில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் 30% அளவு குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி தற்போது முடிந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்ப்பு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் டிரைவர் & கண்டக்டர் பணிகளுக்கு TNPSC தேர்வுகள்? அமைச்சர் விளக்கம்!

ஆனால் ஒரு சில முகாம்களில் மட்டும் மதிப்பெண் சரி பார்க்கும் பணியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2022- 2023ம் கல்வியாண்டு வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமை ஆசிரியர்கள் இதனால் பள்ளிகளை தயார் படுத்தும் பணிகளை செய்ய வேண்டிய நிலை இருப்பதால், விடைத்தாள் திருத்தும் முகாம்களில் இருந்து தலைமை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கும்படி அரசு தேர்வுகள் துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!