தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ரூ. 7000 உதவித்தொகை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரியலூர் மாவட்டத்தில் 2022 – 2023-ம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 13ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2022-23-ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3,000 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4,000 தொழிற்பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000 இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000 முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000 வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3,000 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு ரூ.5,000 முதுகலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு ரூ.6,000 வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அரசு விளக்கம்!
மேற்கண்ட தகுதியுடையோர் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17 ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.