தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவதால் இதற்கு பதிலாக மாற்று முறை அறிமுகப்படுத்த உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவது குறைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்ய முடிகிறது. ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையில் முதியவர்களுக்கு கை ரேகை பதிவு மேற் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது இது தொடர்பாக ஒரு முக்கிய தகவல் ஒன்றை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினால் என்னென்ன பலன்கள்? முழு விவரம்!

இவர் கூறியதாவது, ரேஷன் கடைகளில் தற்போது மின்னணு பதிவேட்டில் அதாவது கைரேகைகளை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெறுவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் ரேஷன் கடைகளுக்கு வருகை தர முடியாத நபராக இருப்பின் அந்த நபர் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மாற்றி கொடுக்கப்படும். அதாவது மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்கென்று பரிந்துரைக்கப்பட்ட நபர்களால் பெற்று கொள்ளலாம். இதற்கு அவர்கள் ரேஷன் கடைகளில் படிவத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!