தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை செயலர் முக்கிய உத்தரவு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கூட்டுறவுத்துறை செயலர் முக்கிய உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கூட்டுறவுத்துறை செயலர் முக்கிய உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை செயலர் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் பொருட்களை விலைக்கு வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து புதிய உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இத்தகைய நேரத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க ரேஷன் அட்டைத்தார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மறுபடியும் விநியோகம் செய்யக்கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த புகாராக ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விலைக்கு வாங்க சொல்லி கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பால் விலை – தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா

Exams Daily Mobile App Download

இதனை விசாரித்த கூட்டுறவுத்துறை செயலாளர் ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் தற்போதைய அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!