தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் துவக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகள் துவக்கம்:
பேருந்து போக்குவரத்து செலவை காட்டிலும் ரயிலில் கம்மியான செலவு என்பதால் பலரும் ரயிலில்தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள் என பலரும் ரயிலில்தான் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தின் போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் சற்று குறையக் குறைய பழையபடி அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டு பயணிகளுக்கு அனைத்து வித விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் கொரோனா காலகட்டத்தின் போது நிறுத்தப்பட்டன. அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்ட நிலையிலும் கூட ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தற்போது வரைக்கும் துவங்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பலரும் மீண்டும் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் ரயில் சேவைகளை துவங்கும்படி கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் இனி சுழற்சி முறையில் மின்தடை? மின்வாரியம் விளக்கம்!
பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று வரும் ஜூன் 27ம் தேதி முதல் ராமேஸ்வரம் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரயில் சேவைகளை துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் ஜூன் 27 முதல் ரயில் சேவைகள் துவங்கப்பட உள்ளதால் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளை சார்ந்துள்ள தொழில்கள் அனைத்துமே மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.