தமிழக வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு – அடுத்த 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்!
சென்னையில் இன்று (ஜூலை 9) முதல் அடுத்து வரும் 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
போக்குவரத்து மாற்றம்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அண்ணா ஆர்ச் பகுதி, ஈ.வெ.ரா பெரியார் சாலைப் பகுதிகளில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த மாற்றமானது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக கோயம்பேடு முதல் அமைந்தகரை பகுதி வரைக்கும் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இப்படி திருப்பி விடப்படும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 25 மீட்டர் இடைவெளி கொண்ட சுற்றுப்பாதையில் சென்று அமைந்தகரை பகுதியில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்? அரசு தரப்பு விளக்கம்!
அதே போல நெல்சன் மாணிக்கம் பகுதிக்கு செல்லவிருப்பவர்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலம் மூலம் கடந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைந்தகரை பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அதே வழியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர கோயம்பேடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வழியில் அரும்பாக்கம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.