தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறைகள் இதோ!
தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயிர்வாழ் சான்றிதழ்:
தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருடந்தோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று சான்றிதழை சமர்ப்பிப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அதனால் தற்காலிகமாக உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது கொரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு தொற்று மிக எளிதாக பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தபால் நிலையம் வாயிலாகவும், ஜீ’வன் பிரமான் செயலி மூலமாகவும் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது 2022ம் ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழை செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையின் மூலமாக ரூ.70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம். மேலும் அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு ஆண்டு உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் 210 ஆர்டர்லிகள் விடுவிப்பு – காவல்துறை அறிவிப்பு!
அதே போல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை இந்திய தூதரக அலுவலர், நீதிபதி சான்று உறுதி அலுவலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று ஓய்வூதிய அலுவலகத்திற்கு தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரடியாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க சமர்ப்பிக்க உதவும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் முகாமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.