தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பொது விடுமுறை அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை ஒட்டி தமிழ்நாட்டில் ஜனவரி 17ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் போகியில் ஆரம்பித்து காணும் பொங்கல் என மொத்தம் 4 நாட்கள் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். இப்பண்டிகையை கொண்டாட்ட ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்கள் தயாராகி விடுவர். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்தால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ஜனவரி 17ம் தேதி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
இந்த பண்டிகை ஒரு பாரம்பரிய விழா என்பதால் வெளியூர்களில் பணி செய்பவர்களும் பண்டிகை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று சொந்த ஊர்களுக்கு வருவர் இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்களால் அன்றைய தினம் செல்ல முடியாது. மேலும் ஜனவரி 18ம் தேதி தைப்பூச திருவிழா அனைத்து முருகப்பெருமான் திருக் கோயில்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். கூட்டம் அதிகம் கூடும் என்பதால் அன்று கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.17 வேலை நாள்!
மேலும் அன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளதாலும் பொது மக்கள் மீண்டும் பணிக்கு செல்ல வசதியாகவும் ஜனவரி 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 17 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.