தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை:
அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரிகைகள் எழுந்துள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் பிறப்பித்துள்ளது. மேலும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டார்.
Exams Daily Mobile App Download
கடந்த ஜூலை 5ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு கால நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது, கவனத்துடன் சுய கட்டுப்பாட்டுடன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழாவை சிறப்பிக்க புதிய ஏற்பாடு – பிரதமர் அறிவிப்பு
மேலும் இடைநீக்கம் செய்யப்பட்டால் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். மேலும் ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை அரசிடம் ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் குற்றவியல் நடவடிக்கை தொடர்பான வழக்குகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில தலைவர் ச.ராமமூர்த்தி இது போன்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை என்று கூறுகிறார். அதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு கூட்டம் நடத்தினால் சங்கங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.