தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 1 நாள் வேட்டி, சட்டை அணிய வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வாரம் 1 நாள் வேட்டி அணிய வேண்டும் மேலாண் இயக்குனரும், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியுமான சகாயம் வலியுறுத்தி உள்ளார். ஊழியர்கள் நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐஏஎஸ்:
இந்தியாவில் பல தரப்பட்ட மொழி பேசும் மக்கள், கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள், வாழ்ந்து வருகின்றனர். அதனால் இந்தியாவை நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று கூறுகிறோம். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொழி, மதம், நடனம் இவற்றை தொடர்ந்து உணவு, உடுத்தும் உடை போன்றவையும் பொறுத்து மாறுபடுகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் பரம்பரியமான சேலை, வேட்டி உடையை மக்கள் உடுத்துகின்றனர். இது தான் தமிழர்களின் கலாச்சாரம். ஆனால் வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் வேட்டி, சேலை உடுத்துவது என்பது அரிதான ஒன்றாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மக்களை பாரம்பரிய உடைகளை அணிய வைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்கள் வாரம் 1 நாள் வேட்டி அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய முன்னாள் கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், 2014 கால கட்டத்தில், அரசு ஜனவரி 6ம் தேதியை வேட்டி தினமாக அறிவித்தது. மாநிலம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அணிய வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டருக்கும், கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதினேன்.
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – 11வது தவணைத்தொகை கிடைக்குமா? சரிபார்ப்பது எப்படி?
அப்போது 20க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தனர். 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் நம் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். அதன்பிறகு இதனை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் கைவிட்டது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதனை லாவகமாக கையில் எடுத்துக்கொண்டு இதனை வணிகமாக மாற்றியது. ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.