தமிழக தொலைதூரக் கல்வி கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை இந்த முறை நேரடி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தான் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மே மாதத்திற்கான செமெஸ்டர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?
மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூர (ODL) படிப்புகளுக்கு UGC அங்கீகாரம் இல்லை எனவும், இனி மாணவர்கள் அங்கு ODL படிப்புகளில் சேர வேண்டாம் எனவும் UGC தெரிவித்திருந்தது. அதன்படி, இது குறித்து UGC வெளியிட்டிருந்த அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெறாமல் இருக்கிறது. அதனால் எந்த உயர் கல்வி நிறுவனமும் தொலைநிலை மற்றும் திறந்த நிலை அல்லது ‘ஆன்லைன்’ படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்திருந்தது.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 – 15 ஆம் கல்வியாண்டுக்கான மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் அதன் பிறகு, அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறப்பட வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, அங்கீகாரம் பெறாத படிப்புகள் படித்தால் உயர் நிலைக் கல்வியில் சேர முடியாது என்றும் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றும் UGC தெரிவித்துள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடக்கும் தொலைநிலைப் படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC திட்டவட்டமாக குறிப்பிட்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.