தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பல்கலை கால அட்டவணையை மாற்ற வலியுறுத்தல்!
அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வு குறித்த கால அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணைகள் வெளியாகி உள்ளது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு ஜூன் 22 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த செமஸ்டர் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் அன்றைய தினம் தமிழக காவல் துறையின் TNUSRB SI பதவிக்கான தேர்வு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வானது 2022ம் ஆண்டு ஜூன் 25, 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். விண்ணப்பதிவுகள் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து இணையதளத்தில் தேர்வு கூட அனுமதி சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வும் SI பணிக்கான தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்? அமைச்சர் விளக்கம்!
பட்ட மேற்படிப்பு பயிலும் பலரும் SI தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அன்றய தினம் கல்லூரி பருவத்தேர்வு நடைபெறுவதால் அவர்கள் தேர்வு எழுத முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு தேர்வுகளும் நடைபெறுவதால் எதை எழுதுவது என்று தெரியாமல் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கால அட்டவணையை மாற்றியமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒரு வாரம் தேர்வை ஒத்திவைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.