தமிழக 11ம் வகுப்பு கணினி அறிவியல் மாணவர்கள் கவனத்திற்கு – கட்டணம் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்பப்பாடம் படிக்கும் மாணவர்களின், தனி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கட்டணம் ரத்து:
தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. எனவே, கணினி படிப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அரசு பள்ளிகளிலேயே கணினி பாடம் கொண்டுவரப்பட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்பப்பாடம் படிக்கும் மாணவர்களின், தனி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1999 ஆம் ஆண்டுக்கு பின் கணினி அறிவியலை விருப்ப பாடமாக பயில்வோரிடம் இருந்து 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் 200 ரூபாய் கட்டணம் ரத்து செய்வதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 3.50 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. தற்போதைய கல்வித்துறை அமைச்சர் பள்ளி மாணவர்கள் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைப்பதற்காக, 2022-23 ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி விருப்பப் பாடத்தை படிக்கும் மாணவர்களிடம், தனி கட்டணமாக தலா, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், கடந்த கல்வியாண்டில், 3.27 லட்சம் மாணவர்களிடம், 6.54 கோடி ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக, சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கான தனி கட்டணம், 200 ரூபாய் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், 3.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் என அதில் கூறப்பட்டுள்ளது.