தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து நடப்பு கல்வியாண்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. அடுத்ததாக நவம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவலின் 3ம் அலையின் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தபடி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த அட்டவணையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Cognizant தனியார் துறை நிறுவனத்தில் அருமையான வேலை – உடனே விண்ணப்பிக்கலாம்..!

அத்துடன் தேர்வின்போது முறைகேடுகளை தவிர்க்க 37 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவின் கீழ் 4000க்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதத்துக்குள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் மாணவர்களுக்கு அவர்கள் எழுதிய விடைகளுக்கேற்ப அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!