தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மேலும் நேற்று 12 ஆம் வகுப்பிற்கு தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் இன்று 10 ஆம் வகுப்பிற்கு தொடங்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
பொதுத்தேர்வு தொடக்கம்:
கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் கொரோனாவால் பள்ளிகளுக்கு செல்லாமல் பெரும் சிரமத்தில் இருந்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட இருக்கிறது, மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என முன் கூட்டியே பள்ளிக்கல்வித்துறை தேதிகளை பற்றி அறிவிப்பு வெளியிட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் காலதாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டு இருப்பதால் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை போக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகம் புதுச்சேரியில் நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. இந்த தேர்வானது மே 31 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தை பொறுத்தவரை 4,60,247 மாணவிகள், 4,78,089 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,38,337 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்த இருக்கின்றனர். புதுச்சேரியில் 8,272 மாணவிகளும், 8,530 மாணவர்களும் என மொத்தம் 16,802 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் 3,888, புதுவையில் 48 என மொத்தம் 3,936 தேர்வு மையங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மேலும், 30,765 தனித் தேர்வர்களும், 242 சிறைவாசிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.