தமிழகத்தில் 10,12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிகளை எண்ணி காத்து கொண்டிருக்கும் நிலையில் புதிய உத்தரவு ஒன்றை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவு:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி 1 – 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மே 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இத்தேர்வானது மே 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14ம் முதல் அம்மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10,11,12 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறைக்கு பிறகு 1 – 10 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல 12ம் வகுப்பிறகும் ஜூன் 20 அன்று காலை மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு தங்களது மதிப்பெண்களை அறியலாம்.
TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – முடிவு எப்போது வெளியீடு? கட் ஆப் பற்றிய விவரங்கள்!
தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மாணவர்கள் இணையதளம் மற்றும் தங்களது பள்ளிகளுக்கு சென்றும் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.