TN பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு – டிஜிபியின் அறிவுரைகள்!
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. மேலும் பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அன்பான அறிவுரைகள்:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவுகளை வெளியிட்டார். இதன் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து ஜூன் 24 ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். இதையடுத்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி முதல் மறு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நிதி நெருக்கடி காரணமாக விடுமுறை! அரசு அதிரடி!
இதையடுத்து பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு அன்பான அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதாவது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், மனம் சோர்வு அடையாமல் மறு தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்களை பெறலாம் என்று கூறினார். இதையடுத்து தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள், நல்ல கல்லூரி, நல்ல துறை கிடைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம், ஏராளமான துறைகள் உள்ளன. எனவே அதை தேர்வு செய்து வரும் காலத்தில் அந்த துறையில் சாதிக்கலாம் என அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் மாணவர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.