SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
எம்.டி.எஸ்.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மே 7 ஆம் தேதிக்குள் இ.எஸ்.இ ன் இணையதள முகவரிக்கு சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
MTS தேர்வு:
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள 1948 பணியிடங்களை நிரப்ப எம்.டி.எஸ் என்னும் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டு பணிபுரிந்தவர்கள் இந்த தகுதி தேர்வினை எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – IT நிறுவனங்களில் சூப்பர் வாய்ப்பு!
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 10, 12 ஆம் வகுப்பு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் என பலரும் இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு எழுத்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதப் போகும் தேர்வாளர்கள் இ.எஸ்.இன் இணையதள முகவரிக்கு சென்று பதிவு எண், பாஸ்வேர்டை கொடுத்து மே 7 ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி (HRA) உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மல்டி டாஸ்கிங் அலுவலர் என்கிற பணிக்கான எழுத்துத் தேர்வு பேஸ்-1, பேஸ்- 2 என இரண்டு கட்டங்களாக நடைபெறும். பேஸ்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பேஸ்- 2 தேர்வில் கலந்துகொள்ள முடியும். மேலும், பேஸ்-1 தேர்வு முடிவுகள் அறிவித்த பேஸ்- 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்நுட்ப சர்வீஸ் நிறுவனத்தில் தான் தேர்வு நடைபெற இருக்கிறது.