பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – தேர்ச்சி கட்டாயம்! புதிய நடைமுறை அமல்!
கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை டெல்லி அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. அதன் படி தற்போது 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி தேர்வு:
இந்திய தலைநகர் டெல்லியில் 1000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கிலும், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் நோக்கிலும் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 54 பள்ளிகளை முன்மாதிரியாக மாற்ற முடிவு செய்யப்பட்டு பள்ளிகளில் ஸ்மார்ட் பலகை, லேப்டாப்கள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் உள்விளையாட்டு அரங்கம், நவீன கழிப்பறை, நீச்சல் குளம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டது.
தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி கீழ் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் டெல்லி அரசு இந்த சட்டத்தின் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – கூட்டுறவு துறை அதிரடி!
Exams Daily Mobile App Download
ஒரு வேளை தேர்ச்சி பெற தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது அடுத்த 2 மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,8ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்