SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
வட்டி விகிதம்:
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களையும், அதில் சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களை அளிக்கிறது. வாகனக் கடனில் 10.50% வட்டியில் 20,000 முதல் 3 லட்சம் வரை வாகனக் கடன் பெறலாம். செயலாக்க கட்டணம் இன்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் வீட்டிலிருந்தே கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த மாதம் முதல் தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65% ஆக உயர்த்தியுள்ளது. மேலும் சி ஆர் பி கட்டணம் சேர்க்கப்படுவதால் அடிப்படை வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது. எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் வீட்டிலிருந்தே கடன் பெறும் வசதியும் உள்ளது. வீட்டுக் கடன் வட்டி அதிகரிக்கப்பட்டாலும் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் பெறலாம். ஆனால் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதிக வட்டி விதிக்கப்படும். சிபில் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் மற்றும் அவர் கடனை திருப்பிச் செலுத்திய விவரங்களை மதிப்பிடுவதாகும்.
தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் பெற வேண்டும் என்றால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு மேல் இருந்தால் 7.05% முதல் 7.45% வரை வட்டி விதிக்கப்படும். மேலும் சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால் 7.15% வட்டி விதிக்கப்படும். 00 – 749 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.25% வட்டி விதிக்கப்படும். அதே 600 – 699 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.35% வட்டி விதிக்கப்படும். 550 – 649 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.55% வட்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.