Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதத்தில் உயர்வு!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
வட்டி உயர்வு
இந்திய அஞ்சல் துறையில் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உள்ளிட்ட பல வகையான திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் குறைவான நாட்களில் இரட்டிப்பு லாபத்தை பெற முடிகிறது. தற்போது இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு காலாண்டிற்கும் அரசு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு மதிப்பாய்வு மேற்கொள்கிறது. அந்த வகையில் ஜூலை 1ம் தேதி முதல் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!
அதன் தொடர்ச்சியாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி தற்போது அஞ்சல் அலுவலகத்தில் தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1% வட்டியும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 6.8% வட்டியும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6% வட்டியும், மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு திட்டத்தில் 7.4% வட்டி விகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.