Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் பான் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். ரூ.50,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு பான் இணைப்பு கட்டாயமாகும்.
அஞ்சல் கணக்கு:
இந்தியாவில் தற்போது மக்கள் வங்கிகளை போல அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. மேலும் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டி தொகை கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்தவையே.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘மேரா ரேஷன்’ செயலியின் முக்கிய அம்சங்கள்!
தற்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கணக்கு தொடங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் அஞ்சல் துறை புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டிக்கு, வட்டி சான்றிதழ் அளிக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் கணக்குதாரர்கள் தங்களின் கணக்கை கொள்ளும் போது பாஸ் புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் கணக்கு நிறைவு அறிக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தது.
அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்குடன் பான் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அஞ்சலகத்தில் அனைத்து விதமான கணக்குகளிலும் ரூ.50,000க்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு எண்ணை கணக்குடன் இணைத்திருப்பது அவசியம். மேலும் ரூ.20,000க்கு மேல் பணம் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Postoffice is the worst office that i ever seen, i have me kids account, it’s being for more than 5 years, it takes atleast half an hour to deposit. Every single time they will tell that system is slow. Buy ever time i can feel that person who is working is slow.