Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் தற்போது 1.56 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. மேலும் தபால் துறை சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாக முக்கிய அறிவிப்பை போஸ்ட் ஆபீஸ் அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
பொது மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற வங்கிச் சேவையை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே வங்கிச் சேவைகளைப் பெற முடியும். இந்த பேமெண்ட் பேங்க் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு 2 சதவீதமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
அதேபோல், ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் 2022 பிப்ரவரி 1 முதல் ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 2.25 சதவீதமாகவும், ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 2.50 சதவீதமாகவும் இருந்தது. வாடிக்கையாளர்களின் பேலன்ஸ் நிலவரத்தைப் பொறுத்து காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
ஜூன் 8ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!
மேலும் ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிச் சேவைகளுக்கான கட்டணங்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் உயர்த்தியிருந்தது. மேலும் அடிப்படை சேமிப்பு கணக்குகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டணம் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வங்கியில் கணக்கு தொடங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வட்டி விகிதத்தில் பயன் பெறலாம். அவர்களுக்கு ஏடிஎம் கார்டு, செக் புக், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.