சபரிமலை கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – ஆகஸ்ட் 4 நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் கொண்டாடப்படும் நிறைபுத்தரிசி பூஜை ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பூஜைக்காக அந்த ஒரு நாள் மட்டும் நடைதிறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதாவது, தேவசம்போா்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்களை சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைத்து வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜையின் நோக்கமாகும். மேலும், அந்த வழிபாடு செய்யப்பட்ட நெற்கதிர்களையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் ரத்து? செலவீனத்துறை எச்சரிக்கை!
அதே போல இந்தாண்டிற்கான நிறைபுத்தரிசி பூஜை வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும்., இந்த நிறைபுத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது. நடைதிறந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 5.30 மணியளவிலேயே நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. மேலும், இந்த நிறைபுத்தரிசி பூஜை முடிந்த பிறகு ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவிலேயே நடை அடைக்கப்படுகிறது. இந்த ஒரு நாள் பூஜைக்காகவே பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.
Exams Daily Mobile App Download
மேலும், இதே நாளில் சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் – குருவாயூரப்பன் கோயிலிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்வதை போலவே இந்த கோவிலிலும் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி ஆகியோர் தலைமையில் நெற்கதிா்கள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜை செய்யப்பட்ட பின்னர் அந்த நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.