சபரிமலை கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – மீண்டும் செப்.16ம் தேதி நடை திறப்பு!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலின் நடை நாளை இரவு நடை மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை நடை சாத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நடை திறப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் மிக பெருமை வாய்ந்த கோவிலாக சபரிமலை திருக்கோவில் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு வருடங்களாக கொரோனா பெரும்தொற்றின் காரணமாக எந்த வித திருவிழாக்கள், கேளிக்கைகள் எதுவுமே நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்ததால் கோவில்களில் திருவிழாக்கள் வழக்கம் போலவே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தான் சபரிமலையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு என்று பல வித சலுகைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நாட்களிலும் அஸ்தமன பூஜை, உதய அஸ்தமன பூஜை ஆகியவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு என்று ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயிலின் நடை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
ஓணம் பண்டிகை அன்று பூஜைகள், நெய் அபிஷேகம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து நாளை (செப்டம்பர் 10) இரவு 10 மணி அளவில் நடை சாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை சிறப்பு பூஜைகள் எதுவுமே நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நேற்று பக்தர்களுக்கு என்று ஓண விருந்து வழங்கப்பட்டது. தற்போது நடை சாத்தப்பட்டுள்ளதால், அடுத்து சபரிமலையில் வருகிற 16ம் தேதி நடை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்