Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ கடந்த ஆண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்தது. மேலும் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் அதிகமான பலன்கள் கிடைக்கும் திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
ப்ரீபெய்ட் திட்டம்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிமுகப்படுத்தினர். இதையடுத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் எந்த தொலைதொடர்பு நிறுவனத்திடமும் இல்லாத அளவு மிகவும் குறைந்த விலையை கொண்டிருக்கிறது.
மீண்டும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் – பிரதமர் ஆலோசனை!
அத்துடன் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுபடி 30 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 30 நாட்கள் முதல் 31 நாட்கள் வரை செலுப்படியாகும் 5 வகையான ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக ஜியோ ரூ.181 திட்டத்தில் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தமாக 30 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும் மற்ற பலன்கள் ஏதும் கிடைக்காது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜியோ ரூ.259 திட்டத்தில் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை கிடைக்கிறது.
தமிழகத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – திருநெல்வேலியில் முகாம்!
அத்துடன் ஜியோவின் அனைத்து பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும். இதனை தொடர்ந்து ரூ.241 திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதில் மொத்தமாக 40 ஜிபி டேட்டா வரை கிடைக்கிறது. இத்திட்டம் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்ததாக ஜியோவின் ரூ.301 திட்டத்திலும் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதிலும் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் காலிங் மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதிகள் கிடைப்பதில்லை. அதனால் இத்திட்டமும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.