ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அமல்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் ரேஷன் கார்டில் கோதுமை மற்றும் அரிசி பெறுவதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரேஷன் கார்டு
மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. திமுக சட்டமன்ற தேர்தலில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தின் காரணமாக ஏராளமான மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டுகளை பெற அதிகமாக விண்ணப்பித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் கோதுமை மற்றும் அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பல மாநிலங்களில் கிடைக்கும் கோதுமை தருவதில் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சற்று குறைவாக இருப்பதால் இந்த மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதன்படி,மத்திய அரசு கோதுமையின் அளவை குறைத்து, தற்போது அரிசிக்கான அளவை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட மாநிலங்களின் மக்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டதை விட குறைவான கோதுமையும், அதிக அளவு அரிசியும் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த மாற்றம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.