ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் கார்டு ரத்து செய்யப்படுமா? ஆணையர் விளக்கம்!
உத்திரபிரதேசத்தில் தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டை பயன்படுத்த கூடாது என்று தகவலால் வெளியானது. மேலும் அவர்கள் தங்களது ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது இச்செய்தி குறித்து அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
Exams Daily Mobile App Download
இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைத்தனர். இந்த ரேஷன் கார்டு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் வசதி படைத்தோரும் பயன்பெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை தவிர்க்க தகுதி உள்ளவர்கள் மற்றும் பயனடையும் வகையில் ரேஷன் கார்டு விதிகள் மாற்றம் அடைய போவதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் தகுதியற்றவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்காது என்றும், அவர்கள் தங்களது கார்டை ரத்து செய்ய வேண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 89% பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி – மத்திய மந்திரி தகவல்!
இது குறித்து அம்மாநில உணவு வழங்கல் துறை ஆணையர் ஷன் கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று தகவல் பரவியிருந்தது இதனை அவர் மறுத்துள்ளார். இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அரசு அளித்துள்ள விளக்கத்தை அடுத்து ரேஷன் கார்டு பயன்படுத்தி வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.