ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – அமலாகும் புதிய விதிகள்!

0
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு - அமலாகும் புதிய விதிகள்!
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு - அமலாகும் புதிய விதிகள்!
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – அமலாகும் புதிய விதிகள்!

இந்தியாவில் மக்களுக்கு பிஎம் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பொருட்களை பெற முடியவில்லை என்றால் வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலம் புகார்களை தெரிவித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் பல ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அல்லது மலிவு விலையில் ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கி வருகின்றன. இந்த ரேஷன் பொருட்களை வாங்க ரேஷன் கார்டு இருப்பது முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி, புதிய ரேஷன் கார்டை பெறவோ, தொலைந்த ரேஷன் கார்டை மீண்டும் பெறவோ அல்லது பெயர் நீக்கம் செய்யவோ, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வீட்டில் இருந்தே செய்வதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், பிஎம் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் பலனைப் பெற முடியாமலோ அல்லது இலவச ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலும் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை தெரிவித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளன.

Exams Daily Mobile App Download

அந்த முறையில் மின்னஞ்சல் மூலம் புகார் செய்ய, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனவும், மேலும் டெல்லியில் உள்ளவர்கள் மட்டும் இந்த ஐடியில் மெயில் செய்ய முடியும் என்பதை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி,டெல்லியின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ( http://fs.delhigovt.nic.in ) புகார் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்லி அரசு இலவச மொபைல் எண்ணை பயன்படுத்தி புகார்களை தெரிவித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். ரேஷன் புகார்களை தெரிவிக்க (1800110841) என்ற எண்ணை அழைக்க வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தி எந்த பயனும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் அருகில் உள்ள அலுவலக முகவரிக்கு சென்று புகாரை தெரிவித்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கள்ளக்குறிச்சி சம்பவ எதிரொலி!

குறிப்பாக இந்த எண்களை பயன்படுத்தி ரேஷன் கார்டை பிளாக் செய்வது பற்றிய புகாரையும் தெரிவித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அலுவலக முகவரியை டெல்லி அரசின் இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவித்து கொள்ளலாம். அதேபோல் இணையதளம் மூலமாகவும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மேலும் www.tnpds.gov.in மூலமாகவும்  இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!