ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு.. அதிகரிக்கும் மோசடி? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
ரயில்வே தேர்வு வாரியத்தின் தேர்வுகள் அனைத்தும் மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதாகவும், போலியான தகவல்களை அளிக்கும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி எச்சரிக்கை:
அரசு பணிக்கான மோகம் இளைஞர்களுக்கு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு மோசடியாளர்கள் அரசு வேலைக்கான நியமனத்தை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொள்கின்றனர். இளைஞர்களும் அரசு வேலை என்ற கனவினால் இவ்வாறு ஏமாந்து விடும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்காக அரசு பல விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், இது போன்ற நிகழ்வுகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில், RRB தேர்வின் லெவல்-1 (குரூப்-டி) தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளை RRB வாரியம் தனிப்பட்ட நிறுவனத்தின் மூலம் நடத்தி வருகிறது. மொத்தமாக 1.1 கோடிக்கும் அதிமான தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்கின்றனர். இதுவரையிலும் 3 கட்ட தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. நான்காம் கட்ட தேர்வு கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும். தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வினாத்தாள் தனித்தனியாக அளிக்கபடும்.
பென்ஷன்தாரர்களின் கவனத்திற்கு.. பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றம் – முக்கிய தகவல் உள்ளே!
Exams Daily Mobile App Download
ஒரே மாதிரியான வினாத்தாள் அளிக்கப்படாது. இதனால் தேர்வுகளுக்கான விடைத்தாள் தருவதாக யாரேனும் கூறினால் அதனை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தேர்வு மையங்களில் தேர்வர்களின் நடவடிக்கைகள் கேமரா மூலம் சோதிக்கப்படும், தேர்வு நடத்தும் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமல்லாது ரயில்வே ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் தேர்வர்கள் மோசடியான பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்