ரயில் பயணிகள் கவனத்திற்கு – மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் அமல்? அரசு விளக்கம்!
இந்தியாவில் ரயில் சேவையில் மூத்த குடிமக்களுக்கென்று சில சலுகைகளை ரயில்வே துறை அறிவித்துள்ளதாகவும் இதனை வருகிற ஜூலை 1 முதல் அமல்படுத்த உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி கொண்டிருக்கிறது. இந்த தகவல் உண்மையானதா என்று பார்ப்போம்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது IRCTC நிறுவனம் ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி IRCTC என்ற ஆப் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தற்போது ரயில்வே துறையில், 60 வயதான ஆண்களுக்கு டிக்கெட் பெறுவதில் 40% மற்றும் 58 வயதான பெண்களுக்கு 50% சலுகையும் வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. அத்துடன் இந்த திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது போலியான தகவல் என்றும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விரைவில் அக்னிபாத் திட்டம் குறித்த ஆய்வு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
மேலும் இது தொடர்பாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதாவது, மூத்த குடிமக்களுக்கு எந்தவொரு சலுகையும் அளிக்கப்படவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1 முதல் எந்த ஒரு சலுகையும் அமல்படுத்தப்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்தியன் ரயில்வே இது போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று PIB ட்விட்டரில் ரயில்வே வாரியம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.